துத்வா புலிகள் சரணாலயம் நவம்பர் 1 முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் துத்வா புலிகள் சரணாலயம் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் துத்வா புலிகள் சரணாலயம் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதனையொட்டி வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
அவை;
காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற நோய் தொடர்பான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை.
10 வயதுக்கு குறைவானவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக, வனப்பகுதிக்கு சுற்றுப்பயணம் செய்யும் போது சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களில் இருந்து இறங்குவதை தடை செய்துள்ளது.